தமிழ் திரையுலகில், விண்டேஜ் ஹீரோயின்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் ராதா. தமிழ் மொழி மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தார். இவருக்கு கார்த்திகா மற்றும் துளசி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் துளசிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மூத்த மகள் கார்த்திகாவிற்கு திருமணம் ஆனது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகா நாயர்..


ராதாவின் மகள் கார்த்திகா, 2011ஆம் ஆண்டு வெளியான ‘கோ’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு பாரதி ராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் நடித்தார். தெலுங்கு மொழியிலும் சில நாட்கள் கதாநாயகியாக ஜொலித்தார். அதன் பின்னர் ஏனோ தெரியவில்லை திரையுலகை விட்டு விலகினார். சினிமாவிற்க பிறகு இவர், தனது தந்தையின் தொழிலை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. 


தடபுடலாக நடந்தேறிய திருமணம்..


நடிகை கார்த்திகா, சினிமாவில்தான் ஆக்டிவாக இல்லையே தவிர தனது இன்ஸ்டா பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக இருப்பார். சில நாட்களுக்கு முன்பு கையில் மோதிரத்துடன் ஒருவரை கட்டிப்பிடித்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் தனக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளது என்பதை அவர் அறிவித்தார். அதன் பிறகு, உறவினர்கள் கலந்து கொண்ட இவரது நிச்சயதார்த்த விழா நடைப்பெற்றது. இதையடுத்து, கடந்த 19ஆம் தேதி, கார்த்திகாவிற்கு கேரளாவில் உள்ள திருவணந்தபுரத்தில்  திருமணம் நடந்தது. இவர் திருமணம் செய்து கொண்டவரின் பெயர், ரோகித் மேனன். இவர், கார்த்திகாவின் நெடுங்கால காதலர் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் செம ரொமான்ஸ்! போர்வைக்குள் காதல் லீலைகள்-வைரலாகும் வீடியோ!


கொடுக்கப்பட்ட வரதட்சனை..


கார்த்திகாவின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண நிகழ்வுகளின் வீடியோக்கள் இணையத்தில் பல நாட்களாக வைரலாகி வருகின்றன. சங்கீத், நலங்கு, திருமணத்திற்கு ரெடி ஆவது என அனைத்தும் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டன. கார்த்திகா-ரோகித் ஆகியோர் அணிந்திருந்த ஆடைகள், நகைகள் என அனைத்துமே விலை உயர்ந்தவை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை ராதா தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் போது பெரிய தொகையை வரதட்சனையாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 


நடிகை ராதா, நடித்து கொண்டிருந்த காலத்திலேயே ஹோட்டல் வணிகத்தில் பணத்தை முதலீடு செய்து, தொழிலதிபராக மாறினாராம். இவரது குடும்பமே தற்போது இந்த தொழிலில்தான் இருக்கின்றனராம். கார்த்திகாவின் திருமணத்திற்காக ராதா 500 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, கார்த்திகாவின் கணவர் ரோகித்தும் மிகப்பெரிய தாெழிலதிபர் என்றும் அவருக்கும் பல கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | சந்தானத்தின் 80ஸ் பில்டப்.. வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ