நடிகைகள் லாஸ்லியா மரியநேசன் மற்றும் ஷிவானி நாராயணன் இருவரும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் தமிழ்' நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றனர். சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டு, இளம் நடிகைகள் மற்றும் பிற சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் பக்கங்களில் ஆன்-லைன் சூதாட்டத்தை ஊக்குவிப்பதால் சிறைக்குச் செல்லும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.  இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருவதாக நாளுக்கு நாள் தகவல் வெளியாகி வருகிறது. சிலர் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை தமிழக அரசு சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Maari TV Serial: பெண்ணாக வந்த அம்மன்.. தவிடுபொடியான ஜாஸ்மின் சூழ்ச்சி! நடந்தது என்ன?



ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுபவர்களுக்கு ரூ.500 அபராதமும், 3 மாத சிறைத்தண்டனையும், ஆன்லைன் கேம்களை வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் கூறினார். இந்நிலையில் லாஸ்லியா, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட சில நடிகைகள் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, மேலும் வழக்கறிஞர் தனது எச்சரிக்கை வீடியோவை வெளியிட தூண்டியுள்ளார். ஷிவானியும் லாஸ்லியாவும் இதிலிருந்து விலகுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



இலங்கையில் உள்ள தமிழர்கள் அதிகம் வாழும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் லாஸ்லியா மரியநேசன். 18 வயதிலே இலங்கையில் செய்தி வாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அவருக்கு அந்த பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இதன் மூலம் பிக்பாஸ் சீசன் 3 போட்டியிலும் கலந்து கொண்டார். அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார்.  பிக்பாஸுக்கு பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.  கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, நடித்த ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் லாஸ்லியா முக்கிய வேடத்தில் நடித்தார். இப்போது மேலும் சில படங்களில் லாஸ்லியா நடித்து வருகிறார்.  மேலும் சமீபத்தில் உடல் எடையை மிகவும் குறைத்து வேறொரு நபர் போல் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.  


மறுபுறம் ஷிவானி நாராயணன் விஜய் டிவி சீரியல் மூலம் அறிமுகமானவர்.  ஆந்திராவை சேர்ந்த இவருக்கு நடனம், நடிப்பு, மாடலிங் துறையில் அதிக ஆர்வமுண்டு.  ஆனால், சிரீயலில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் ஆர்வம் காட்டினார்.  ரெட்டை ரோஜா, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  அதன் பின்பு பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு அதிக புகழ் கிடைக்கவில்லை.  இவருக்கும் பாலாவுக்கும் பிக்பாஸ் வீட்டிலேயே காதல் மலர்ந்தது.  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரம், வீட்ல விசேஷம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். அவ்வப்போது இன்ஸ்டாவில் இவர் பதிவும் புகைப்படங்கள் வைரல் ஆகும்.



மேலும் படிக்க | Ponniyin Selvan 2 review: பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ