தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. இவர், 2002 ஆண்டு வரை 2004ஆம் ஆண்டு வரை இந்தி படங்களில்தான்  நடித்து வந்தார். பின்னர் மெல்ல மெல்ல தென்னிந்திய சினிமாவிற்குள் அறிமுகமாகி தற்போது பலர் அறிந்த முகமாக மாறிவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீரா ரெட்டி: 


நடிகை சமீரா ரெட்டி சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் மேக்னா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன்னதாக இவர், சில இந்தி படங்களிலும் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு இவருக்கு மவுசு கூட, தொடர்ந்து அஜித், விஷால் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தா. ஆனால், அந்த படங்கள் வாரணம் ஆயிரம் அளவிற்கு ஹிட் ஆகவில்லை. இருப்பினும் இவருக்கு இந்த படங்கள் தனி பெயரை பெற்று தந்தன. 


மேலும் படிக்க | ரம்யா பாண்டியனின் தங்கையை கரம்பிடிக்கும் அசோக் செல்வன்


திருமணம்-குழந்தைகள்: 


தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி, 2013ஆம் ஆண்டு முதல் திரையுலகில் முகம் காண்பிப்பதை நிறுத்திவிட்டார். இவர், ஒரு பட விழாவின் போது தொழிலதிபர் அக்‌ஷய் வர்தே என்பவரை சந்தித்தார். பார்த்தவுடன் காதல் வயப்பட்ட இவர்கள் சில மாதங்களுக்கு பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் சமீரா ரெட்டிக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அவற்றை நடிகை தட்டிக்கழித்து விட்டார். 


சமீரா ரெடிக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சினிமாவை விட்டு விலகிவிட்டாலும், இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ்களை செய்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 


உருவ கேலி: 


நடிகை சமீரா ரெட்டி, குழந்தை பிறப்பிற்கு பின்னர் உடல் எடை கூடிவிட்டார். தனது இந்த உடல் எடை மாற்றம் குறித்தும் இணையத்தில் பகிர்ந்துள்ள அவர், உடல் ஒல்லியாக இருந்த போது எடுத்த புகைபடங்கள் மற்றும் வீடியோக்களையும் தற்போதுள்ள புகைப்படங்களையும் இணைத்து அவர் ‘இதுவும் நல்ல மாற்றம்தான்’என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் இவர் குறித்து நெடு நாட்களுக்கு பிறகு தேடும் ரசிகர்களுக்கு இவரை குண்டான தேகத்துடன் பார்ப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறுகின்றனர்.  இதனால் இவர் அவ்வப்போது உருவ கேலிக்கு ஆளக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. 


வருத்தப்பட்ட நடிகை: 


நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது சினிமாவில் தான் அதிக படங்களில் நடித்து பிரபலமான நேரத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் திருமணத்திற்கு முன்பே தான் கர்பமாக இருந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த வகையான வதந்திகள் எதுவும் உண்மை இல்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். 


திருமணத்திற்கு பின்புதான் தனக்கு மகன் பிறந்ததாகவும் அதன் பிறகு ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களினால் தான் குண்டாகி விட்டதாகவும் சமீரா ரெட்டி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த அக்கம் பக்கத்தினர் தனக்கு ஏதோ ஆகிவிட்டதாக உருவ கேலி செய்ததாக கூறியிருக்கிறார். இதற்கு பயந்து தான் வெளியில் வருவதை கூட நிறுத்தி விட்டதாகவும் சமீரா அந்த நேர்காணலில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், ‘இவருக்கா இப்படியொரு நிலை..’ என வெதும்பி வருகின்றனர்,


மேலும் படிக்க | க்ளைமாக்ஸில் ரஜினியின் சூப்பர் மாஸ் சீன்! ஜெயிலர் படத்தின் டெலீடெட் காட்சிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ