தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சுனைனா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருப்பதற்கான காரணம் என்ன? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுனைனா:


தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர், சுனைனா. டோலிவுட்டில் குமார் vs குமாரி எனும் படம் மூலம் அறிமுகமான இவர், தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார். அப்படத்தில் நகுல் உடன் இணைந்து நடித்திருந்த அவர், அதற்கு அடுத்து மாசிலாமணி படத்திலும் அவருடனே இணைந்து நடித்திருந்தார். வம்சம் படமும் நீர்பறவை படத்திலும் வலிமையான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார் சுனைனா. தனது நடிப்பிற்காக பல விருதுகளையும் அவர் வாங்கி குவித்திருந்தார். அடுத்து விஷாலுடன்‘சமர்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்தி வந்தாலும் ஏனோ இவருக்கு மட்டும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவே இல்லை. 


இவர் விஜய்யுடன் இணைந்து‘தெறி’ படத்தில் ஒரு சிறிய கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதை தவிர, அவர் எந்த பெரிய ஹீரோவுடனும் ஜோடி சேர்ந்து நடித்ததில்லை. சுனைனா நடித்துள்ள பல படங்களில் அவரது நடிப்பிற்காக பாராட்டுகளை பெற்றுள்ளன. அவர் நடித்த பல படங்கள், வலிமை மிக்க கதைகளாகவும் இருந்துள்ளன. 


மேலும் படிக்க | நடக்க கூட முடியாத நிலையில் பிரபல நடிகை..! ரசிகர்கள் அதிர்ச்சி..!


நடிகை சுனைனா, தற்போது சில வெப் தொடர்களிலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹீரோயினை மட்டுமே முக்கிய கதாப்பாத்திரமாக எடுக்கப்பட்ட “ரெஜினா” திரைப்படம் வெளியானது. க்ரைம்-த்ரில்லர் பாணியில் வெளியாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் ஓரளிற்கு வரவேற்பினை பெற்றது. இதையடுத்து சுனைனா சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுனைனா..!


நடிகை சுனைனாவின் சமீபத்திய சமூக வலைதள பதிவுகள் அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. கையில் டிரிப்ஸ் ஏறுவது போலவும் மூக்கில் டியூப் வைத்திருப்பது போலவும் சுனைனா ‘தம்ஸ் அப்’ சிக்னலுடன் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். இதனுடன் சேர்த்து, “எனக்கு சிறிது நேரம் கொடுங்கள். நான் திரும்பி வருவேன்…” என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “எங்க செல்லத்துக்கு என்னாச்சு..” என்பது போல சில கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 


சுனைனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இரண்டு போட்டாேக்களை வெளியிட்டுள்ளார். இவர் “தனக்கு உடல் நிலை சரியில்லை” என்று பதிவிட்டதற்கு ஒரு சிலர் “இதையெல்லாம் ஏன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுகிறீர்கள்..” என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுனைனா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் “எனது பிரச்சனைகளை பற்றி எனக்கு பதிவிட உரிமை இல்லையா..இது போன்ற உலகில்தான் நாம் வாழ்கிறோமா..” என்று பதிவிட்டுள்ளார். சுனைனாவிற்கு ஏதேனும் விபத்து நேர்ந்ததா, இல்லை அவரது உடல் நலனில் ஏதேனும் பிரச்சனையா என்பது அவர் கூறினால்தான் தெரிய வரும். 


மேலும் படிக்க | சாலை விபத்தில் சிக்கி இளம் நடிகர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ