ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களுள் ஒன்று, அமுதாவும் அன்னலட்சுமியும். காதலையும்-கல்வியையும் அழகாக புதிய கோணத்தில் சொல்லும் தொடர் இது. இதில் பிரபல சீரியல் நடிகை கண்மணி மனோகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவரை தவிர, பல சின்னத்திரை நடிகர்களும் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர், விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 படங்கள் இவை தான்!


முந்தைய எபிசோட்


செந்தில், ஐயப்பன் சாமிக்கு போட்ட மாலையை கழட்டி விட்டு வர, அன்னம் அவனுக்கு பழநி முருகனுக்கு மாலை அணிவித்து விடுகிறாள்.  இதனால் முதலிரவு ஆசையில் இருந்த செந்தில் அதிர்ச்சியாக அமுதா, மாணிக்கம் அரோகரா சொல்லி செந்திலை வெறுப்பேற்றுகின்றனர். அடுத்து செந்தில் அமுதாவுக்கு எப்படி பேச வேண்டும் என எழுதி தர அமுதா பேசிப் பேசி பார்க்கிறாள். ஆனால் அவளால் சரியாக பேச முடியாமல் போகிறது. அதை தொடர்ந்து பழனியும் உமாவும் நாகுவை சந்திக்கின்றனர். உமா அன்னமண்டி என கூப்பிட நாகு அவளை திட்டுகிறாள். 



இன்றைய எபிசோட்


உமாவும் பழனியும் நாகுவை சந்தித்து பணத்தை கொடுத்து சிதம்பரத்தை எப்படியாவது எங்களுக்கு ஓட்டு போட வைக்க வேண்டும் என சொல்லிய நிலையில் இன்றைய எபிசோடில் இதுதான் நடக்கப்போகிறது. வீட்டுக்கு வந்த நாகு சிதம்பரத்திடம் உங்களால எதுவும் உருப்படலை.. நீங்க பழனிக்கு ஓட்டுப் போடலேன்னா நானும் பூஜாவும் உசிரோட இருக்க மாட்டோம் என மிரட்டுகிறாள். இதையடுத்து காலையில் செந்தில், கிளம்பி வர அவனது டிரஸ்சை பார்த்து விட்டு அமுதா எதுக்காக ஆசைப்பட்டு உங்களை கல்யாணம் பண்ணிகிட்டனோ அது இன்னைக்கு நிறைவேறிடுச்சு.. என்னை பார்த்து ஊர்ல எல்லாரும் வாத்தியாரம்மா வாத்தியாரம்மா என்று சொல்லனும் என பேசுகிறாள். மேலும் எதுக்காக கஷ்டப்பட்டு என் ஆசையை நிறைவேத்துனீங்க என கேக்க, உன் மேல உள்ள காதல் தான் என செந்தில் சொல்கிறான். அதன் பிறகு அன்னலட்சுமி இருவருக்கும் திருநீறு பூசி ஆசிர்வாதம் செய்கிறாள். அதனை தொடர்ந்து அமுதா, அன்னம், மாணிக்கம், செந்தில் என அனைவரும் பள்ளிக்கு கிளம்புகின்றனர்.



உமாவின் சதித்திட்டம்


ஒரு பக்கம் அமுதா, தேர்தலில் வெற்று பெறுவதற்கு கடுமையாக உழைத்துக்கொண்டிருக்க, மறுபக்கம் பழனியிடம் உமா இதுல ஜெயிக்கனும்னா இதை பண்ணியே ஆகனும் என ஒரு வில்லத்தனமான திட்டத்தை சொல்கிறாள். பிறகு கோவிலுக்கு செல்வாவும் புவனாவும் வர பழனியின் ஆட்கள் காரில் வந்து இருவரையும் கடத்தி செல்கின்றனர். 


காணத்தவறாதீர்கள்..


இப்படியான பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில், அடுத்ததாக நடக்க போவது என்ன? அமுதா என்ன செய்ய போகிறாள்? தேர்தலில் ஜெயிக்க போவது அமுதாவின் முயற்சியா? உமா பழனியின் சூழ்ச்சியா? இதையெல்லாம் அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரை இரவு 7 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


மேலும் படிக்க | சீதா ராமன்: மதுமிதா கொடுத்த அதிர்ச்சி.. சீதாவுக்காக சண்டை போட்ட ராம


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ