தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. அப்போது, ஒரு பிரபலம் ரசிகரை ‘செருப்பு பிஞ்சிறும்’ என கூறி அவரை அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா: 


அருண் மாத்தீஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், கேப்டன் மில்லர். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம், வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இசை வெளியீட்டு விழா, நேற்று (ஜனவரி 3) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ரசிகர்களும் அதிகளவில் திரண்டனர். 


ரசிகரை திட்டிய பிரபலம்..


கேப்டன் மில்லர் பட விழா நேற்று முடிவு பெற்றதை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி குறித்த பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அதில் ஒரு வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 



சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர், ஐஸ்வர்யா. இவர், நேற்று கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்துள்ளார். தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளைஞரை அவர் “செருப்பு பிஞ்சிறும். கால்ல விழு டா..ஏன் நடிக்கிற நாயே? அப்றம் ஏன்டா ஒட்ற?” என்று கேட்டு அவரை தாக்கினார். அந்த இளைஞர் பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 


மேலும் படிக்க | தமிழகத்தில் சரமாரியாக சறுக்கிய சலார்! இதுவரை செய்துள்ள வசூல் இவ்வளவுதானா?


“தகாத முறையில் நடந்து கொண்டார்..”


கேப்டன் மில்லர் பட விழா முடிவடைந்ததை தொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அவர் அந்த இளைஞரை தாக்குவது ஏன்? என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஐஸ்வர்யாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “கூட்டத்தில் அந்த நபர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இது தெரிந்தவுடன் அவரை அடித்து பிடிக்க முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் அப்படி செய்ததை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதால் அவரை தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார். தன்னை சுற்றி பல மிருகங்கள் இருந்தாலும் பலர் மிகவும் கணிவுடனும் அன்புடனும் தன்னிடம் இருப்பதாக ஐஸ்வர்யா தனது பதிவில் கூறியிருந்தார். 



இவர் அவர்தான்..


சில மாதங்களுக்கு முன்பு, ‘சரக்கு’ பட விழாவை ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த கூல் சுரேஷ், இவருக்கு மாலை போட முயற்சித்தார். இவர் வேண்டாம் என்று கூறியும் மீண்டும் மாலை போட்டார். இது பலரது கண்டனத்துக்கு உரியதாக இருந்ததது. இந்த வீடியோவில் இருந்தே பிரியங்காவின் முகம் பலருக்கும் பரீச்சியமானதாக ஆகி விட்டது. 


மேலும் படிக்க | கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முன்னணி நடிகர்கள் யார் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ