இளம் வயதிலேயே திரையுலகிற்குள் நுழைந்தவர்கள், வெகு விரைவிலேயே லட்சாதிபதியாவதும் கோடிகளில் சொத்து சேர்த்து வைப்பதும் புதிதான விஷயம் அல்ல. அப்படித்தான், ஒரு நடிகை தனது 23வது வயதிலேயே பல கோடிகளில் கார், வீடு என சொத்து வாங்கி சேர்த்து வைத்துள்ளார். அந்த நடிகை யார்? அப்படி அவர் சேர்த்து வைத்த சொத்துக்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஞ்சலி அரோரா:


பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் சின்னத்திரை நடிகைகளுள் ஒருவர், அஞ்சலி அரோரா. தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி போல இந்தியிலும் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஒன்று, “லாக் அப்” இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கினார். பிக்பாஸை போலவே இதிலும் 19 போட்டியாளர்கள் இருப்பர். இவர்களுக்கும் டாஸ்குகள் கொடுக்கப்படும், மக்களிடம் இருந்து அதிக வாக்குகள் பெறுபவர்கள் போட்டியில் தொடருவர்.


லாக் அப் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு அதில் பங்கேற்ற பலர் அதன் பிறகு பிரபலமாவதுண்டு. அப்படி பிரபலமான நடிகைதான் அஞ்சலி அரோரா. இவர், இந்நிகழ்ச்சியின் 2வது ரன்னர்-அப் பட்டத்தை வென்றவர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு அஞ்சலி, சில படங்களிலும் கமிட் ஆனதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | யாஷ் நடிக்கும் TOXIC படத்தின் கதாநாயகி இவரா? வெளியான தகவல்!


13 மில்லியன் ரசிகர்கள்..!


அஞ்சலி அரோராவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவர்கள் அனைவரும் அவர்களது ரசிகர்கள் என கூறப்படுகிறது. நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கே இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன்களுக்கும் குறைவான ஃபாலோவர்ஸ்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லாக்-அப் நிகழ்ச்சிக்கு முன்னர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாகவும் அஞ்சலி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி ரீல்ஸ் செய்து பதிவிடுவது, மியூசிக் வீடியோக்களை எடுப்பது போன்று ரசிகர்களை மகிழ்விக்கும் செயல்களை செய்து வருகிறார். இவருக்கு ஆன்மீகத்திலும் ஈடுபாடு அதிகமாம். அஞ்சலி செய்யும் பல விஷயங்கள் அடிக்கடி ட்ரெண்டாகி வைரலாவதுண்டு. 



23 வயதில் கோடீஸ்வரி..!


அஞ்சலி அரோரா, தனது 23வது வயதிலேயே 4 கோடி மதிப்பிலான வீடு ஒன்றினை சொந்தமாக வாங்கியுள்ளார். டெல்லியில் சாதாரணமாக இருக்கும் வீடுகளே பல லட்சம் மதிப்பில் இருக்கும் இந்த நிலையில், இவர் மக்கள் அதிகம் புழங்கும் பகுதியில் இந்த 4 கோடி மதிப்பிலான வீட்டினை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பல கோடி மதிப்பிலான ஒரு காரை தனது பெற்றோர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார். தனது புது வீடு குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்த நாள் குறித்து பல நாட்களாக கனவு கண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 


நடிகை அஞ்சலி அரோரா, தற்போது படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர், பல கதைகளை கேட்டு வருவதாகவும் விரைவில் பெரிய திரையில் இவரை பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | படையப்பா நீலாம்பரியை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட கே.எஸ்.ரவிகுமார்! எந்த விஷயத்தில் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ