கோலிவுட் வட்டாரம் மட்டுமின்றி, இந்திய சினிமாவையே தற்போது பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வம்'. மறைந்த பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். நடிகர்கள் ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் செப்.30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த செப்.6ஆம் தேதி சென்னையில் மிக விமர்சையாக நடைபெற்றது. ரஜினி, கமல் உள்ளிட்டோர் முதல் பல்வேறு திரைப்பட கலைஞர்கள் அதில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, இணையத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 




வரும் வெள்ளிக்கிழமை அன்று பட ரிலீஸ் என்பதால், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் படு பிஸியாக உள்ளனர். நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோருடன் இயக்குநர் மணிரத்னும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். தற்போது, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியை அடுத்து, படக்குழுவினர் நேற்று மும்பையில் நடந்த விழாவிலும் கலந்துகொண்டனர். 


மும்பை விசிட்


தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் படக்குழுவினர் பங்கேற்றனர். இந்நிலையில், மும்பையில் உள்ள இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் ஸ்டூடியோவிற்கு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் விசிட் அடித்துள்ளனர். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏஆர் ரஹ்மான், த்ரிஷா ஆகியோரை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 



ஏஆர் ரஹ்மான் பதிவிட்ட புகைப்படத்தில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். அதில், "எனது மும்பை ஸ்டூடியோவில் குவிந்த பொன்னியின் செல்வன் படக்குழுவினர்" என குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்ட சில நிமிடங்களில், அவரது மகள் கதிஜா ரஹ்மான்,"உங்கள் அனைவரின் வயது பின்னோக்கி போகிறது போல..." என குறிப்பிட்டு ஹாட் எமோஜியை பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க | மேலும் படிக்க | 'ஐஸ்வர்யா ராய் ஒரு தெய்வப்பிறவி' - வாயை பிளக்கும் இணையவாசிகள்; இந்த போட்டோவுக்கா?


சூடு பறக்கும் டிக்கெட் விற்பனை 


இதை தொடர்ந்து, த்ரிஷாவும் தனது இன்ஸ்டாகிராமில் மும்பை விசிட்டில் எடுத்த புகைப்படங்களை ஸ்டோரியாக பதிவிட்டார். ஒரு புகைப்படத்தில், த்ரிஷாவும், ஐஸ்வர்யா ராயும் ஏஆர் ரஹ்மானின் தோளில் கை வைத்த போஸ் கொடுத்தனர். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.



வரும் வெள்ளிக்கிழமையில் வெளியாகும் பொன்னியின் செல்வன் திரைப்படம், வார இறுதி மற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறைகளை முன்னிட்டு திரையரங்களில் வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இத்திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை நேற்று இரவு ஆன்லைனில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  பொன்னியின் செல்வன் வெளியாகும் அதற்கு முந்தைய நாள் (செப். 29) தனுஷ் - செல்வராகவன் ஆகியோரின் 'நானே வருவேன்' திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 



மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 2 எப்போது?... மணிரத்னம் பதில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ