2004ஆம் ஆண்டு வெளியான கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தவர், ஆஷிஷ் வித்யாத்ரி. இவர் இதுவரை, 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல திரையுலகில் பிரபலமாக உள்ளார். தமிழில் இவர் ஏழுமலை, பகவதி, பாபா, தமிழன், ஆறு, அழகிய தமிழ் மகன், குருவி, கில்லி, தில், தமிழன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது திருமணம்:


நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஜாஷி பருவா என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள்தான், நேற்றிலிருந்து இணையத்தில் ட்ரெண்டிங்கிள் உள்ளது. இவருக்கு 60 வயதான நிலையில் இரண்டாவதாக திருமணம் நடைப்பெற்றிருப்பது பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளது. ஒரு சில ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்க, இன்னும் சில ரசிகர்களே, “இந்த வயசுல இதெல்லாம் தேவையா கோபி..” என கிண்டல் செய்து மீம் போட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | Sivaangi: ‘குட்டி ஸ்ரேயா கோஷல்’ சிவாங்கிக்கு பிறந்தநாள் இன்று!


நடிகர் கூறியது: 


வித்யாத்ரியின் திருமணம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டதை தொடர்ந்து, அவர் ஒரு பதிவினை வெளியிட்டார். அதில், "எனது வாழ்வின் இந்த நிலையில் ரோஜாஷியை திருமணம் செய்திருப்பது அசாதரணமான உணர்வினைத் தருகிறது. காலையில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். அதனைத் தொடர்ந்து விருந்து நிகழ்வும் நடைப்பெற்றாது” என்று குறிப்பிட்டு அதர்கான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டிருந்தார். 


முன்னாள் மனைவி பதிவு!


வித்யாத்ரி, ஆனந்தமாக பதிவிட்டதை தொடர்ந்து, இதை ரசிகர்கள் அவரவர் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வந்தனர். வித்யாத்ரியின் பதிவை தாண்டி, அவரது முன்னாள் மனைவி ரோஜாஷியின் பதிவு அதிக கவனத்தை பெற தொடங்கியது. இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ஸ்டோரியில் நேற்று ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார். அதில், “உனக்கு ஏற்ற ஆள், உனக்கு துன்பம் தர வேண்டும் என ஒருபோதும் எண்ண மாட்டார். அதை ஞாபகம் வைத்துக்கொள்” என்பது போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இன்னொரு பதிவில் “இத்தனை நாட்கள் நீ வலிமையுடன் இருந்து விட்டாய், இது உனக்கான ஆசிர்வாதங்களை நீ பெற வேண்டிய நேரம்..” என்பது போன்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. 


“புதிரான வாழ்க்கை..”


வித்யாத்ரியின் திருமணம் குறித்த பதிவுகள் நேற்று வைரலாகி கொண்டிருந்த நிலையில், ரோஜாஷியும் அவரது போட்டோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவிற்கு கீழ், “இந்த புதிரான வாழ்க்கைக்குள் புதிருக்கான விடையை தேடாதே..” என்பது போன்ற கேப்ஷனை அவர் எழுதியிருந்தார். 


மறைமுக தாக்கு?


ரோஜாஷி, இவ்வாறு வெளியிட்டிருந்த பதிவும், புகைப்படமும் ரசிகர்களிடையே பரவி வருகிறது. ஒர் சிலர், “இவர் தனது முன்னாள் கணவரைத்தான் மறைமுகமாக தாக்குகிறாரோ..” என்றும் சந்தேகித்து வருகின்றனர். வித்யாத்ரி-ரோஜாஷி இருவரும் 23 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆர்த் வித்யாத்ரி என்ற மகனும் உள்ளார். 


நடிகர் ஆசிஷ் வித்யாத்ரி தற்போது ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் உணவு வீடியோக்களை பதிவிட்டு தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்துள்ளார்.


மேலும் படிக்க | Adah Sharma: தி கேரளா ஸ்டோரி நாயகி அடா சர்மாவின் மொபைல் எண் இணையத்தில் லீக்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ