தமிழ் திரையுலகின் இளம் கதாநாயகர்களுள் ஒருவரான அசோக் செல்வன் தமிழில் குறிப்பிடத்தக்க சில வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்து வருகிறார். இவர் முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படத்தில் இளம் வயது பில்லாவாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூது கவ்வும்' படத்தில் அசோக் செல்வன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து பல படங்கள் வரிசை காட்டியது. பீட்சா-2 வில்லா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார், அதனை தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, 144, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் மொழிப்படங்கள் மட்டுமின்றி இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படத்திலும் நடித்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் நடிகர் அசோக் செல்வன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் போர் தொழில் படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். புதிதாக வேலை பார்த்திருக்கும் போலீஸ் அதிகாரியாக தனது துறுதுறுப்பான மற்றும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட நிலையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


மேலும் படிக்க | சூப்பரான சுதந்திர தினவிழா விருந்து.. ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?


இதனிடையே தற்போது நடிகர் அசோக் செல்வன் செல்வனின் திருமணம் குறித்த செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அசோக் செல்வனுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. பிரபல நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரியை தான் அசோக் செல்வன் மனக்க இருக்கிறார். 


இந்நிலையில் இவரின் தங்கையும் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளும் ஆன நடிகை கீர்த்தி பாண்டியனை தான் அசோக் செல்வன் மணக்கயிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்பது பலருக்கும் புதிராக இருக்கிறது. 


முன்னதாக அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜும் நடித்து வருகிறார். ப்ளூ ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் நெருங்கி பழகி வர நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது. இப்போது இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள். மேலும் விரைவில் இவர்களது திருமண தேதியை இருவரும் சேர்த்து அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்க்கலாம்.


பொதுவாக திரை பிரபலங்கள் குறித்து அடிக்கடி கிசுகிசுக்கள் எழுவது வழக்கமான ஒன்று, அந்த வகையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அசோக் செல்வன் பற்றிய கிசுகிசுக்களும் ஊடகங்களில் வெளியானது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது அமெரிக்காவில் பாடகியாகவும், மாடலாகவும் கலக்கி வரும் பிரகதி குருப்ரசாத்தை, நடிகர் அசோக் செல்வன் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. அதற்கேற்ப இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது. அதன்பின்னர் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்றும் தங்களுக்குள் இதுபோன்ற உறவு எதுவுமில்லை என்றும் விளக்கம் அளித்தனர். 


அசோக் செல்வன்-பிரகதி விஷயம் தற்போது அடங்கியுள்ள நிலையில், தற்போது கீர்த்தி பாண்டியனுடன் செப்டம்பர் மாதம் திருமணம் குறித்த செய்தி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 16 வயதினிலே நாயகிக்கு 60-வது பிறந்தநாள் இன்று..! ஸ்ரீதேவிக்கு மரியாதை செய்த கூகுள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ