அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிடிஷா பெஸ்பரூபா (30) பல டிவி நிகழ்ச்சிகளிலும், ஜக்கா ஜசோஸ் என்ற ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இவர் மும்பையிலிருந்து டெல்லியின் குர்கான் பகுதியில் வசித்து வந்தார்.


இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று அவரது தந்தை அவருக்கு பல முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை இதன் காரணமாக அச்சம் அடைத்த அவர் தந்தை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக கூறியுள்ளார்.


போலீசாருக்கு தகவல் அளித்தப்பின் அவர்கள் அங்கு சென்றனர். கதவு பூட்டியிருந்தது காரணத்தால் போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பிடிஷா, தூக்கில் பிணமாக இருந்துள்ளார். இதை தொடர்ந்து அவரது தந்தை பிடிஷாவின் தற்கொலை குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.


அந்த புகாரின் அடிப்படையில் பிடிஷாவின் மொபைல் போன், பேஸ்புக் உள்பட சமூக வலைதளங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தேவைப்பட்டால் பிடிஷாவின் கணவரை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


தற்போது வரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.