இயக்குநர் கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் ‘நிறங்கள் மூன்று’. இந்த படத்தில் லீட் ரோலில் அதர்வா முரளி நடிக்கிறார். முக்கிய கதாப்பாதிரங்களில் சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் (AYNGARAN INTERNATIONAL) நிறுவனம் தயாரிக்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படம் குறித்து Ayngaran International சார்பில் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி பேசும்போது, " 'நிறங்கள் மூன்று' போன்ற அழகான பாத்திரங்களும், மிகச்சிறந்த திரைக்கதையும் கொண்ட அட்டாகசமான  படத்தை தயாரிப்பதை பெருமையாக நினைக்கிறேன். Ayngaran International நிறுவனம் 35வது வருடத்தில் கால் பதிக்கிறது. இது எங்கள் நிறுவனத்தின் 25-வது படைப்பாகும். இதனால், ஒரு அற்புதமான திரைப்படத்தை உருவாக்க நினைத்தேன். “நிறங்கள் மூன்று” மூலம் அது நிறைவேறியுள்ளது.


ALSO READ | Master vs valimai: இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்!


கார்த்திக் நரேன் திரைக்கதையை விவரித்தபோது, இந்தக் கதையின் கதாபாத்திரங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர் கதை சொல்லிக்கொண்டிருகும்பொதே, இந்த பாத்திரங்களுக்கு யார் பொருத்தமானவர்? என்று யோசிக்க ஆரம்பித்து, பல நடிகர்கள் பெயர் என் மனதில் ஓட ஆரம்பித்தது. நான் நினைத்த நடிகர்களின் பெயரையே கார்த்திக் நரேனும் சொன்னது மிகவும் ஆச்சரியமான தருணம். 


அதர்வா முரளி, சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகியோர் சிறந்த நடிகர்கள், அவர்கள் எப்போதும் அழுத்தமிகுந்த கதைகளிலும், வணிக ரீதியில் லாபம் தரும் படைப்புகளிலும் தங்கள் திறனை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறார்கள். இப்படத்தில் கார்த்திக் நரேன் தனது திறமையான இயக்கத்தால், இந்த கலைஞர்களின் திறமையை, அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார். தனது முதல் அறிமுக திரைப்படமான ‘துருவங்கள் பதினாறு’ மூலம் மொத்த திரையுலகிலும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் மீது எனக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு உண்டு. குறுகிய காலத்தில், திரைத்துறையில் பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிந்து, அவர் தனது  மகத்தான திறமையை நிரூபித்துள்ளார். “நிறங்கள் மூன்று” இயக்குநர் கார்த்திக் நரேனின் அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.


ALSO READ | பிகில்-ஐ BEAT செய்ய முடியாத வலிமை டிரெய்லர்..!


இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கி, மார்ச் மாதத்துக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR