ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சௌந்தரபாண்டி பரணி மற்றும் கார்த்திக் நிச்சயதார்த்தம் நடத்திய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


வைகுண்டம் என் மகளுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலாமா இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என சொல்ல தங்கைகள் ரத்னாவிடம் அப்போ மாப்பிள்ளையை தேர்வு செய்ய வேண்டியது உன் கையில் தான் இருக்கு என சொல்கின்றனர். மறுபக்கம் பரணி மற்றும் பாக்கியம் என இருவரும் சந்தோஷமாக இருக்க இதை பார்த்த முத்துப்பாண்டி கடுப்பாகிறான். 


உடனே சௌந்தரபாண்டியிடம் வந்து என்னப்பா இது அவ இஷ்டத்துக்கு அவ விரும்பறவனை கல்யாணம் பண்ணி வைக்க ஓகே சொல்லிட்டீங்க, நிச்சயதார்த்தம் நடத்தி வச்சிட்டீங்க என்று சொல்ல நிச்சயம் மட்டும் தான் அவன் கூட நடக்கும் கல்யாணம் நான் சொன்ன மாப்பிள்ளை கூடத்தான் நடக்கும் என்று சொல்ல முத்துப்பாண்டி  அது எப்படி என்று கேட்க நான் வி கே ஆர் பாத்திர கடைக்காரரிடம் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன் அவர் கல்யாணம் நடந்தால் போதும் என சொல்லிவிட்டார் என்று தன்னுடைய திட்டத்தை சொல்கிறார். 


அதன் பிறகு ரத்னா வெளியே செல்ல அங்கு வெங்கடேஷ் இவளை பார்த்து ஏதோ பேச வர ரத்னா என் அண்ணனை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்ப வெங்கடேஷ் சரி போ என கோபப்பட்டு அமைதியாகி விடுகிறான். கொஞ்சம் தூரம் நடந்து சென்ற ரத்னா திரும்பவும் திரும்பி வந்து என்ன என்று கேட்க வெங்கடேஷ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த போட்டோவை எடுத்துக்காட்ட ரத்னா கண் கலங்குகிறாள். இந்த போட்டோவில் இருக்கும் சந்தோசம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் இருக்கணும்னு நினைக்கிறேன் என பேசுகிறான். 


அதன் பிறகு சண்முகம் வீட்டுக்கு வரும் பரணி என்ன வைர மோதிரம் பண்ண சொல்லி இருக்கிறதா ஆச்சாரி அம்மாவுக்கு போன் பண்ணி சொன்னாங்க, அதுதான் எதுவும் வேண்டாம் என்று சொல்லிட்டாங்களே அப்புறம் எதுக்கு இதெல்லாம் என்று கேட்க சண்முகம் என்னதான் இருந்தாலும் செய்ய வேண்டியது செய்யணும்ல என்று சொல்கிறான். அம்மா இதெல்லாம் எதுவும் வேண்டாம்னு சொல்ல சொன்னாங்க என்று சொல்ல சண்முகம் அதெல்லாம் வேண்டாம்னு சொன்னாலும் செய்யணும் என்று சொல்லி அங்கிருந்து நழுவி கொள்கிறான். 


அதனைத் தொடர்ந்து ரத்னா வீட்டுக்கு வர அவளது புடவையிலிருந்து வெங்கடேஷ் கொடுத்த போட்டோ கீழே விழுந்து விடுகிறது. பரணி இதை பார்த்து விடுவாளோ என்ற பில்டப் எகிற கனி இந்த போட்டோவை பார்த்து விட்டு பிறகு ரத்னாவிடம் சென்று புடவையில் ஒரு போட்டோ மறச்சு வச்சுட்டு மனசுக்குள்ள ஒருத்தனை வச்சுக்கிட்டு எப்படி இந்த கல்யாணம் பண்ணிக்க போற என்று போட்டோவை காட்டி கேள்வி கேட்க ரத்னா அதிர்ச்சி அடைகிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ