பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதை ஒட்டி, இந்த வாரம் போட்டியில் இருந்து முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் சீசன் 7:


பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழ் மாெழியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகத்தான் தென்னிந்திய மொழிகளில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனிலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். 


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் நெருங்கி வரும் நிலையில், முக்கிய போட்டியாளர்கள் பலர் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆகி வருகின்றனர். அந்த வகையில், இந்த வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். 


இந்த வாரம் வெளியேறிய நபர்..


பிக்பாஸ் 7 போட்டியின் பலமான போட்டியாளர்களுள் ஒருவராக கருதப்பட்டவர், சரவண விக்ரம். போட்டியின் முதல் வாரத்தில் கொஞ்சம் ஆர்வமாக அனைத்திலும் பங்கேற்ற இவர், அடுத்த வாரத்தில் கேப்டன் ஆனார். ஆனால், அவரை பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் பலர் மதிக்கவேயில்லை. இதையடுத்து இவர் மீது மக்களுக்கும் பெரிய நம்பிக்கை இல்லாமல் போனது. 



மேலும் படிக்க | Salaar Box Office: சலார் படத்தின் முதல்நாள் வசூல் விவரம்! தமிழ்நாட்டில் இவ்வளவுதான் கலக்ஷனா..?


டைட்டில் வின்னரே வெளியேற்றம்..


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களுக்கு ‘கண்ணன்’ என்ற கதாப்பத்திரமாக அறிமுகமானவர் சரவண விக்ரம். இவருக்கென்ற தாய்மார்களும் ரசிகைகளும் ரசிகர் பட்டாளமாக உள்ளனர். இவர், சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் தனக்குள் தானே பேசிக்கொண்டார். அப்போது கமல் வாய்ஸில், “பிக்பாஸ் டைட்டில் வின்னர் சரவண விக்ரம்..” என்று அவருக்கு அவரே கூறிக்கொண்டார். இது, ட்விட்டர் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. பிக்பாஸில் கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர வருகை தரும் வாரமாக இருந்ததது. சரவண விக்ரமின் குடும்பத்தினரும் வந்தனர். அவர்கள், பூர்ணிமா மற்றும் மாயாவிடமிருந்து தள்ளியே இருக்குமாறு விக்ரமுக்கு அறிவுரை கூறினர். 


இந்த நிலையில், மக்களின் வாக்குகளை குறைவாக பெற்றதால் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


பலமான போட்டியாளர்கள்..


பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இன்னும் வீட்டிற்குள் இருக்கின்றனர். இவர்களில் சிலர்தான் இறுதிக்கட்டத்திற்கு செல்ல உள்ளனர். பூர்ணிமா, மாயா, ரவீணா தாஹா, ஆர்.ஜே.அர்ச்சனா, விஜய் வர்மா, விசித்ரா உள்ளிட்டோர் இப்போட்டியின் பலமான போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். இவர்களில் யாரேனும் ஒருவருக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ‘தளபதி 68’ படத்தின் தலைப்பு இதுதான்! அட..இது புதுசா இருக்கே..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ