பாலிவுட் நடிகை பாபி டார்லிங் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்து அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் நடிகை பாபி டார்லிங். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2015-ம் ஆண்டு பாங்காக்கிற்கு சென்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு பெண்ணாக மாறினார் இவர். பாலிவுட் படங்களில் நடித்து வரும் பாபி ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். 


இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்தார் கொண்டார். அதன் பிறகு தனது பெயரை பாக்கி சர்மா என்று மாற்றிக் கொண்டார். 


அவரது கணவர் ராம்னீக் தினமும் குடித்துவிட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக பாபி டார்லிங் போலீசில் புகார் அளித்துள்ளார். ராம்னீக் அடிக்கும் போது அழுது தனது உடையில் சிறுநீர் கழித்ததாகவும் பாபி தெரிவித்துள்ளார். 


ராம்னீக் தன் பணத்தை எல்லாம் பறித்துக் கொண்டதுடன் தன்னுடன் இயற்கைக்கு புறம்பான முறையில் உறவு வைத்ததாகவும் பாபி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 


என் பணத்தை வைத்து ராம்னீக் கார் வாங்கினார். மும்பையில் உள்ள என் அபார்ட்மென்ட்டில் அவரும் சக உரிமையாளர் என்று எழுதி வாங்கிக் கொண்டார். 


தற்போது என்னிடம் பணமே இல்லை என்று பாபி தெரிவித்துள்ளார். ராம்னீக் வீட்டில் இல்லாத நேரத்தில் டாக்சி வரவழைத்து தப்பினேன். என்னை கண்டுபிடித்துவிடுவார் என்று நினைத்து செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்தேன். விமான நிலைய கழிவறையில் 8 மணிநேரம் பதுங்கியிருந்து மும்பைக்கு தப்பி வந்தேன் என்று கூறியுள்ளார்.