கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டன.குறிப்பாக யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 அங்கு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் கோலோச்சியதை அடுத்து பாலிவுட் நடிகர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகின்றனர். மேலும், தென்னிந்திய படங்கள்போல் பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவில் எடுபடுவதில்லை என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி வசூலிலும் பாலிவுட் படங்களை தற்போது தென்னிந்திய படங்கள் எளிதாக ஓரங்கட்டுகின்றன.



சமீபத்தில் ஒரு மேடையில் சிரஞ்சீவிகூட இதுதொடர்பாக பெருமையாக பேசியிருந்தார். அதேசமயம், தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் நன்றாக ஓடுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக திரை பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


மேலும்  படிக்க | ஒன்றரை வருடங்கள் மொட்டை தலைதான்... பொன்னியின் செல்வன் அனுபவம் பகிரும் ஜெயராம்


இந்நிலையில் கங்கனா ரணாவத்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தென்னிந்தியத் துறையில் அனைவரும் ரசிகர்களிடம் இணைப்புடன் இருக்கின்றனர். அது மிக மிக வலிமையானது. பாலிவுட் நட்சத்திரக் குழந்தைகள் படிப்பை முடிக்க வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். 



ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். ஹாலிவுட் படங்களை மட்டும்தான் பார்ப்பார்கள். அதுமட்டுமின்றி பார்ப்பதற்கு அவித்த முட்டைகள் போல் இருப்பார்கள்” என்றார். கங்கனாவின் இந்தப் பேச்சு தற்போது பாலிவுட் திரையுலகில் பரபரப்பி ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க | VJ சித்ராவைத் தொடர்ந்து மற்றொரு இளம் சீரியல் நடிகை மர்ம மரணம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR