சென்னையில் உள்ள இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அபிராமபுரத்தில் இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவேண்டும் என மிரட்டி தொலைப்பேசி வந்ததாக இயக்குனர் மணிரத்னம் புகார் தெரிவித்துள்ளார். 


இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படம் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தமிழகளவில் ரூ. 26 கோடி வசூல் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது.