விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரையுலக வாழ்வில் 25-ஆவது திரைப்படமாக உருவாகி வரும் படம் சீதக்காதி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் மூத்த நாடகக் கலைஞராக நடித்துள்ளார்.


இத்திரைப்படத்தில் இவருடன் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோவிந்த் வஸந்தா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை 'பேஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள அய்யா என்ற பாடலினை வெளியிட்ட படக்குழுவினர், கடந்த அக்டோபர் 17-ஆம் நாள் இப்படத்திற்கு தனிக்கை குழு U சான்றிதழ் அளித்துள்ளதாக அறிவித்தனர்.


இந்நிலையில், படம் வெளியாவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. சீதக்காதி படத்தில், நாடக நடிகராக நடித்துள்ள விஜய் சேதுபதி, அப்படத்தில் காதல், வன்முறை காட்சிகளில் நடித்திருப்பதால் "சீதக்காதி" என்ற தலைப்புடன் படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என கீழக்கரையை பூர்வீகமாக கொண்ட முகம்மது சலையா உசேன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இன்று விசாரிக்கிறது.