சிறு குழந்தைகள் முதல் வயசானவர்கள் வரை வடிவேலுவின் நகைச்சுவைக்கு அடிமை என்றே கூறலாம்.  சில காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.  வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட தடை!


இந்த படத்தின் படப்பிடிப்பு பணி தொடர்பாக நடிகர் வடிவேலுவும் அப்படத்தின் இயக்குனர் சுராஜும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனுக்கு சென்றிருந்தனர்.  லண்டனில் நடிகர் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தீயாய் பரவி வந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் லண்டனில் படப்பிடிப்பு பணி முடிந்து நடிகர் வடிவேலு சென்னை திரும்பியுள்ளார். 



இந்நிலையில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது.  அதனை தொடர்ந்து தற்போது அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  மேலும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்ய அவரது மாதிரிகள் ஓமைக்ரான் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  விரைவில் வடிவேலுவின் உடல்நிலை சரியாக அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.


ALSO READ | தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகும் 'வலிமை'!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR