கோலிவுட்டின் முன்னணி நடிகரான தனுஷ், அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் நடித்துள்ள படம், கேப்டன் மில்லர். இப்படம் இரண்டு பாககங்களாக தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் மில்லர்:


இனி தமிழ் சினிமாவில் வெளிவர இருக்கும் படங்களில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ள ஒரு படம், கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சாணி காயிதம், ராக்கி போன்ற படங்களை இயக்கி பிரபலமான அருண் மாத்தேஸ்வரன் இப்படத்தையும் இயக்குகிறார். இப்படம், உண்மை கதைகளையும் கதாப்பாத்திரங்களையும் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இரண்டு பாகங்களாக தயாராகிறதா…? 


கேப்டன் மில்லர் திரைப்படம், இரண்டு பாகங்களாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. அதிலிருந்தே, இப்படம் குறித்த ஹைப், ரசிகர்களிடையே பெரிதாக உருவாகியுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக போராடி உயிர் நீத்த ‘கேப்டன் மில்லர்’ என்பவரின் வாழ்க்கையை வைத்துதான் இப்படம் உருவானதாக பேசப்பட்டது. ஆனால், படத்தின் இயக்குநர் அருண் மாத்தேஸ்வரன் இந்த வதந்திகளை மறுத்து விட்டார். இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லராக மட்டுமே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 


மேலும் படிக்க | தனுஷின் கேப்டன் மில்லர்.. வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய லைகா, டிசம்பர் 15 ரிலீஸ்


இப்படம் இரு பாகங்களாக வெளியாவதாக சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவலகள் வெளியானது. இதில், முதல் பாகத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ் குமார் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் அதிதி பாலன் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல் குறித்த் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 


கதை என்ன?


கேப்டன் மில்லர் படத்தின் கதை, 1980களில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தின் டிரைலர், தன்ஷின் பிறந்தநாளையொட்டி வெளியானது. அதில், போர் களத்தில் இறங்கி தனுஷ் சண்டையிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மிகவும் குறைவான டைலாக்குகளுடன் கூடிய ரணகளமான சண்டை காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இயக்குநர் மறுத்த போதிலும், இப்படம் இலங்கை தமிழர்கள் குறித்த கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 


தனுஷின் அடுத்தடுத்த படங்கள்


கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தனுஷ், தன் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 50வது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். கேப்டன் மில்லர் படத்திற்காக நீளமான தாடி, மீசை மற்றும் முடியை வளர்த்த தனுஷ், தனது 50வது படத்தில் வேறு கெட்-அப்பில் வருகிறார். கடைசியாக 2017ஆம் ஆண்டின் பா.பாண்டி படத்தை இயக்கிய தனுஷ், அடுத்து இந்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து பணிபுரிந்து டெக்னீஷியன்ஸ், இந்த படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 


‘கர்ணன்’ படத்தில் தனுஷை வைத்து இயக்கிய மாரி செல்வராஜ், அவருடன் மீண்டும் ஒரு படத்தில் கைக்கோர்த்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 


மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ