வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட 125 விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.,50000 வீதம் நிதி உதவி நடிகர் தனுஷ் வழங்கியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி அருகிலுள்ள சங்கராபுரம் என்ற ஊரில் இந்த நிகழ்வு நேற்று நடந்தது. அங்கு 125 விவசாயக் குடும்பங்களையும் சொந்த செலவில் அங்கு அழைத்து வந்து தங்க வைத்திருக்கிறார் தனுஷ். அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்வரை மொத்த செலவும் தனுஷ் தானாம். 


இப்பணிகளை இயக்குனர் சுப்ரமணிய சிவா முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறார். விவசாயிகளுக்கு பணம் வழங்கி உதவிய போது தனுஷுடன் அவரது மனைவி ஐஸ்வர்யா இருந்தார்.


நடிகர் தனுஷ் பேசியதாவது:


விவசாயிகளுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி. மேலும் சில கிராமங்களில் இதுபோன்ற நல உதவி செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். நமக்கு சோறு போடுவது விவசாயிகள். அவர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு. என கூறினார்.