சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஹிட் படமான 'மாரி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை தயார் நிலையில் உள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகமும் தயாராகும் என்று 'மாரி' பட இயக்குனர் பாலாஜி மோகன் தெரிவித்திருந்தார். அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை துங்கிய பாலாஜி தற்போது படத்தின் கதையை முடித்துள்ளார்.


சமீபத்தில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசி பெற்று பூஜையுடன் துவங்கியது. 


இந்நிலையில், 'தனுஷ் 'மாரி 2' கதை தயார் நிலையில் உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.