தமிழ் சினிமாவில் இயக்குநர் சிகரம் என அழைக்கப்படுபார் கே.பாலசந்தர். முதலில் நாடகங்களை இயக்கிய பாலசந்தர் அதன் பிறகு சினிமாவில் காலடி எடுத்துவைத்தார். தமிழ் சினிமாவில் அவர் இயக்கிய அத்தனை படங்களும் காலத்தால் அழியாதவை. குறிப்பாக அவர் படைக்கும் பெண் கதாபாத்திரங்கள் எப்போதும் தனித்து தெரிபவை.  தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் அவர் படத்தை இயக்கியுள்ளார். இன்று இந்திய சினிமாவின் இரு பெரும் துருவங்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமலை அறிமுகப்படுத்தியவரும் பாலசந்தர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்கள் மட்டுமின்றி விவேக், பிரகாஷ் ராஜ் என எண்ணற்ற நடிகர்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்தவர். மேலும் அவர் பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருதுகளை பெற்றிருக்கிறார்.


ஒருமுறை பாலசந்தரிடம் பத்திரிகையாளர் ஒருவர் ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும். ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன ? என்ற கேள்வியை கேட்டார்.


இதற்கு பாலசந்தர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற ஆர்வம் அரங்கத்தில் இருந்த அனைவரிடமும் தொற்றிக்கொண்டது. ஏனெனில் ரஜினி, கமல் என இருவரையும் பிரித்து பார்க்காதவர் பாலசந்தர். 


அந்த பத்திரிகையாளரின் கேள்விக்கு பாலசந்தர் இப்படி பதிலளித்தார், "நான் இயக்கிய 'நூற்றுக்கு நூறு' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். 



நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன். அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.  அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும்.  அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் பார்க்கிறேன்” என்றார். 


இந்தக் கேள்வியை பாலசந்தர் எதிர்கொள்ளும்போது ரஜினி, கமல் இருவருமே பெரிய ஸ்டார்களாக உருவெடுத்துவிட்டார்கள். எனவே இருவரது இமேஜும் தன்னால் உடைந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம் பாலசந்தருக்கு இருந்தது. அப்படிப்பட்ட பாலசந்தருக்கு இன்று 8ஆம் ஆண்டு நினைவு தினம்.


மேலும் படிக்க | துணிவுக்கும், குடும்பத்துக்கும் இருக்கு குட்டி ஸ்டோரி - விஜய் பேசப்போவது என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ