நடிகை அமலாபால் உடனான திருமண முறிவுக்கு பின்னர் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக இயக்குநர் விஜய் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் ‘கிரீடம்', 'பொய் சொல்லப் போறோம்', ‘மதராச பட்டினம்', ‘தெய்வ திருமகள்', ‘தலைவா', ‘சைவம்', ‘தேவி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழில் முன்னணி நடிகை அமலாபாலை திருமணம் செய்துக்கொண்டார்.
 
இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தலைவா', ‘தெய்வத்திருமகள்', ஆகிய இரண்டு படங்களில் நடித்த அமலாபால் உடன் உண்டான காதலின் அடையாளமாக இவர்களது திருமணம் நடைப்பெற்றது. எனினும் அடுத்த மூன்று வருடங்களுக்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017-ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
 
விவாகரத்துக்குப்பின், அமலாபால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் விஜய் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2-வது திருமணத்துக்கு அவர் சம்மதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையே சேர்ந்த ஐஸ்வர்யா என்கிற மருத்துவரை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இவர்களது திருமணம் அடுத்த மாதம் 11-ஆம் தேதி, சென்னையில் நடைபெறும் எனவும், திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவரது குடும்பத்தாரும் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.