நான் மஹத்தை விட்டு விலக முடிவு செய்து விட்டேன். இனி மஹத்துடன் நான் இல்லை, மஹத் முன்னாள் காதலி அதிரடி முடிவு....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் கடந்து விட்டது. தற்போது அந்த வீட்டில் 8 பேர் இருக்கின்றனர். ஒரே வீட்டில் 50 நாட்களுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு இடையே நட்பு உருவாகிவிடும். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் சிலர் நெருங்கிய நண்வர்களாகி உள்ளனர். அந்த வகையில மகத் மற்றும் யாஷிகா ஆனந்த்துக்கு இடையே நட்பையும் தாண்டி காதல் மலர்ந்துள்ளது. 


இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் மகத்தும் பிரபல மாடல் பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் யாஷிகாவை தான் காதலிப்பதாக மகத் மற்ற போட்டியாளர்கள் முன் தெரிவித்துள்ளார். 


பிரச்சி மிஸ்ரா கடந்த 2012 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் பட்டம் (Femina Miss India Earth 2012) பெற்றவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாள் முதலே பிரச்சியுடனான தன் காதல் குறித்து மஹத் கூறி வருகிறார். ஆனால், நேற்றைய எபிஸோடில் யாஷிகா மீது உள்ள காதலை வெளிப்படுத்தினார்.  


இதையடுத்து, இது குறித்து பிரச்சி பகிர்ந்த பதிவில், ``நான் மனதார காதலித்த மஹத்தை பிக் பாஸ் வீட்டுக்குள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தேன். மஹத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் வரை என்னைக் காதலித்தது உண்மை. ஆனால், இப்போது அப்படியில்லை. அவர் யாஷிகாவை காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, நான் மஹத்தை விட்டு விலக முடிவு செய்து விட்டேன். இனி மஹத்துடன் நான் இல்லை. அவரைப் பற்றி என்னிடம் கேட்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். நான் காயப்பட்டிருக்கிறேன். ஆனால், இது என் வாழ்க்கையை மாற்றிவிடாது. நான் என்னைப் பார்த்துக்கொள்வேன். 



மும்தாஜ் மஹத் மீது அக்கறை காட்டினார். ஜனனி மஹத் மீது உண்மையான நட்பை வெளிப்படுத்தினார். ஆனால், இவர்கள் இருவரையும் மஹத் மதிக்கவில்லை. மஹத் இனி என் வாழ்க்கையில் இல்லை. சமூக வலைதளங்களில் மஹத் குறித்து என்னிடம் யாரும் கேட்காதீர்கள். யாருடைய அனுதாபமும் எனக்கு வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.