புதுடெல்லி: நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு இருந்த செய்தி வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அண்மையில் வெளியாகி அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றது. அவருடைய நடிப்பும் கதையும், திரைப்படமும் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றுத் தந்தது.


இந்த நிலையில், இன்று நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் தனக்கு கொரோனா ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.



நலமுடன் இருக்கிறேன் என்பதை தெரிவித்துள்ள சூர்யா, வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பது அனைவருகும் தெரியும். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்புகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் பூரண குணமடைந்து விட்டார் என்பது அவரது சமூக ஊடகச் செய்தியில் இருந்து தெரிகிறது.


Also Read | சூப்பர் நடிகர் சூரர் சூர்யாவின் அசத்தல் in pics


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR