Marimuthu Replacement In Edhirneechal: பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று (செப். 8) காலை உயிரிழந்தார். அவரது உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த ஊர் பசுமலைதேரிக்கு நேற்று மாலை கொண்டுசெல்லப்பட்டது, இன்று அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. தொடர்ந்து அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, கமல் போன்ற நட்சத்திரங்கள் X தளத்தின் மூலமும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் மாரிமுத்து இயக்குநராக 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' ஆகிய இரண்டு திரைப்பபடங்களை இயக்கியிருந்தாலும், சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் மிகவும் பிரபலமைடந்திருந்தார். 'ஏய்... இந்தாமா' என்ற அவரின் வசனமும், ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரமும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. எனவே அவரின் உயிரிழப்பு ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 


அதே நேரத்தில், மாரிமுத்துவின் அந்த கதாபாத்திரத்தால் மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள எதிர்நீச்சல் தொடர் குறித்தும் ரசிகர்கள் அதிகம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், ஒருவர் மரணமடைந்திருப்பதை தொடர் இதுபோன்ற பேச்சுகள் சரியாக இருக்காது என்று கூறப்பட்டாலும், மாரிமுத்து கச்சிதமாக நடித்து வந்த அந்த கதாபாத்திரம் இனி என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.


மேலும் படிக்க | எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் வேதனை பேட்டி!


அந்த வகையில், தற்போது கதாபாத்திரத்தில் மாரிமுத்துவுக்கு பதில் வேறு ஒரு பிரபல நடிகர் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக அறியப்படும் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தியை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மாரிமுத்துவை போலவே கிராமத்து பேச்சு வழக்கிலும், மிடுக்கான உடல் மொழியும் மிரட்ட வல்லவராக வேல. ராமமூர்த்தி உள்ளார். எனவே, மாரிமுத்துவுக்கு பதில் அவரை நடிக்க வைப்பது பொருத்தமாக இருக்கும் என கூறப்படுகிறது.


பட்டத்து யானை, அரியநாச்சி, குற்றப் பரம்பரை உள்ளிட்ட நாவல்களையும், பல்வேறு சிறுகதைகளையும் வேல. ராமமூர்த்தி எழுதியுள்ளார். எழுத்தாளராக இருந்தாலும், மதயானை கூட்டம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் வெப்-சீரிஸில் நடித்திருந்தாலும், இதுவரை டிவி சின்னத்திரை தொடர்களில் நடித்தத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மாரிமுத்துவின் மறைவுக்கு பின் அந்த கதாபாத்திரத்தையும் கதையில் உயிரிழக்க செய்ய வேண்டும் என சில ரசிகர்கள் தெரிவித்தாலும், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தின் வீச்சை கருத்தில் கொண்டு அவரை போன்ற வேறு ஒரு நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அவருக்கு மாற்று கிடையாது என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | இறக்கும் முன் மாரிமுத்து பேசிய போன் கால்! குரல் கேட்டு கலங்கும் ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ