துபாயில் நாளை   நடைபெற உள்ள  ரஜினியின் 2.0 ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் ! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:-


* 2.0 படத்தின் இசை வெளியீடு burj park என்ற இடத்தில் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் முதன் முறையாக உத்தரவு வழங்கியுள்ளது.


 



* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். மேலும் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்.


 



 


* பாஸ்கோ நடனக்குழு சூப்பர்ஸ்டார் ரஜினி - இயக்குனர் ஷங்கர் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.


* இந்நிகழ்ச்சியைப் காண 12000 பேர் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


* துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட LED போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


* துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகமே எதிர்நோக்கும் இந்நிகழ்வைப் பார்க்க பல பிரபலங்கள் துபாய் விரைந்த வண்ணமுள்ளனர்.