ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார். '2.0' படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.


ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் உருவாகி வருகிறது. 2018-ல் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், "கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. அக்டோபரில் துபாயில் இசை வெளியீடு, நவம்பரில் ஹைதராபாத்தில் டீஸர் வெளியீடு, டிசம்பரில் சென்னையில் டிரெய்லர் வெளியீடு" என்று தெரிவித்திருக்கிறார்.


தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பாக பாடல் காட்சி ஒன்றை பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.