தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இவரது உடல் துபாயில் இருந்து மும்பை கொண்டுவரப்படுகிறது. மும்பையில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.


நடிகை ஸ்ரீ தேவியின் மரணம் சினிமா உலகத்தையே சஞ்சலத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு காமெடி நடிகர் கவுண்டமணி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அதிலும் "அரும்புகள்" படத்தில் அவர் கதாநாயகி நான் வில்லன். அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என கூறியுள்ளார்.