கண்பார்வையற்ற இளம் பாடகி ஒருவருக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வாய்ப்பு வழங்கியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் உள்ள ஜி.வி. பிரகாஷ் சமூகத்தில் வரும் நிலைகளை படமாக்கவும், அதனை பாடலாக்கவும் முயற்சி செய்து வருகிறார். ஜல்லிக்கட்டுக்காக இவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.


இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் கண் பார்வையற்ற ஜோதி என்ற பாடகி தனது அழகான குரலில் பாடல்கள் பாடி வெளிப்படுத்தியிருந்தார். இதனைக் கண்ட ஜி.வி. பிரகாஷ் அந்தப் பாடகிக்கு தனது இசையில் பாட வாய்ப்புக்கொடுத்துள்ளார்.