அக்‌ஷய் குமார் மற்றும் கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகி வரும் சூரியவன்ஷி திரைப்படத்தின் அதிரடியான ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோகித் ஷெட்டி இயக்கும் இத்திரைப்படம் அதிரடி காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்டத்தினை நாம் இந்த ட்ரைலர் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.


சூரியவன்ஷி ட்ரைலரில் மும்பை மீதான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து அஜய் தேவ்கன் விவரிக்கிறார். இந்த ட்ரைலர் வாயிலாக ஷெட்டியின் காவல்துறை பிரபஞ்சத்தின் புதிய உறுப்பினரான DCP வீர் சூரியவன்ஷிக்கு நாம் அறிமுகம் செய்யப்படுகிறோம், மும்பைக்கு வரும் மிகப்பெரிய பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுப்பது அவரின் முக்கிய பணியாக இருக்கும் என ட்ரைலர் நமக்கு காட்டுகிறது. 



சூரியவன்ஷியின் மனைவியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார், அஜய் தேவ்கன் (சிங்கமில் பாஜிராவ் சிங்கம்) மற்றும் ரன்வீர் சிங் (சிம்பாவில் சங்கரம் பலேராவ்) ஆகியோர் இந்த படத்தில் கேமியோவாக நடித்துள்ளனர். ஜாக்கி ஷிராஃப் முக்கிய வில்லனாக நடிக்கிறார்.


நான்கு நிமிட-பதினைந்து வினாடி நீளம் கொண்ட இந்த ட்ரைலர் துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள் நிறைந்ததாக உள்ளது. கார்கள் காற்றில் பறக்கின்றன. இத்துடன் சில வேடிக்கையான வசனங்கள் என திரைப்படத்தில் என்ன தான் இல்லை என கேட்கும் அளவிற்கு அதிரடியாக உள்ளது. எவ்வாறாயினும், சிறப்பம்சம் என்னவென்றால், சிங்கம், சிம்பா மற்றும் சூரியவன்ஷி என மூன்று நாயகன்களும் ஒன்றுசேர்ந்து சில கெட்டவர்களைக் கொல்ல காத்திருக்கின்றனர். இதற்கான பெரும் பங்களிப்பு குறித்து முன்னதாகவே தற்போது பேசியுள்ளனர்.


2011-ஆம் ஆண்டில் சிங்கத்துடன் தொடங்கிய ரோஹித் ஷெட்டியின் காவல்துறை பிரபஞ்சத்தின் நான்காவது படம் சூரியவன்ஷி ஆகும். இத்திரைப்படம் வரும் மார்ச் 24, 2020-அன்று வெள்ளித்திரையில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.