இந்து மக்கள் முன்னணி நிறுவன அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் சென்னை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் நடிகர் யோகி பாபு மீது புகார் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர்களுள் ஒருவர் யோகி பாபு. அவ்வப்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றன.


இந்நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் காக்டெய்ல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் யோகி பாபு முருகனாக தோன்றியிருந்தார். அவருக்கு பின்னால் காக்டெய்ல் பறவை ஒன்றுஇடம்பெற்று இருந்தது. இந்தப் போஸ்டர் முருகக் கடவுளை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், எனவே இயக்குநர் மற்றும் நடிகர் யோகி பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்து மக்கள் முன்னணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.



இந்தப் படத்தை இயக்குநர் பி.ஜி.முத்தையா தயாரிக்க விஜயமுருகன் இயக்குகிறார். மேலும் நடிகை அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இதனிடையே திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை நடிகர் யோகி பாபு நேற்று திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.