அன்னையர் தினத்தையொட்டி நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக இன்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் கவித்துவமான தனது தாய்மையின் பயணம் குறித்தும் அந்த உன்னதமான உணர்வை ஏற்படுத்திய தனது மகனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் சில வரிகளை எழுதியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், "வரும் காலங்களில் நிறைய விஷயங்களின் ஒரு தாயாக உனக்கு நான் கற்றுதரவுள்ளேன். ஆனால் நீ எனக்கு ஏற்கனவே நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து விட்டாய். குறிப்பாக தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்கு கற்றுத்தந்துள்ளாய். என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருக்கிறது என்பதை உணரச்செய்துள்ளாய். என் சிறிய இளவரசனே, நீ என் சூரியன், என் சந்திரன், என் நட்சத்திரங்கள் அனைத்தும் நீங்கள்தான். அதை என்றும் மறந்து விடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்".



.நடிகையாக இருந்து தனது மகனுக்கு தாயாக பொருப்பெற்ற காஜல் அகர்வால் தாய்மையின் மனம் உருக உருக எழுதியுள்ள அந்த வரிகளை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த காஜல் அகர்வால் 2020-ல் மும்பை தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதல் திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்பு முழுமையாக குடும்ப  வாழ்கைக்கு கவனம் செல்லுத்திய அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சினிமா வாழ்கையை தற்போது ஓரம் கட்டியுள்ள காஜல், மகனை வளர்ப்பதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். 


மேலும் படிக்க | கேஜிஎப் இயக்குநருடன் கூட்டணி போட்ட ஜூனியர் என்டிஆர் - அப்பேட் இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR