Idhayam Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதயம் எபிசோட் அப்டேட்:


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதிக்கு சாரதாவின் திட்டங்கள் குறித்து அடுத்தடுத்து தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த் 


அதாவது, சாரதா பாரதியை கூப்பிட்டு ஆட்டுக்கால் பாயா.. இது அது என என்னென்ன சமைக்க வேண்டும் என்று லிஸ்ட்டை அடுக்குகிறாள். அதன் பிறகு ஆதி பிசினஸ் விஷயமாக டுபாய் கிளம்ப பாரதி ஸ்வேதாவை இப்படியே வச்சிட்டு இருக்க முடியாதுல, அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும் என்று பேச ஆதியும் ஆமாம் எனக்கு இது தோணவே இல்ல, சீக்கிரம் நல்ல மாப்பிள்ளையாக பார்க்கலாம் என்று சொல்லி கிளம்புகிறான். 


அதனை தொடர்ந்து எல்லாரும் சாப்பிட உட்கார பாரதி வெறும் கஞ்சியை சமைத்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். என்ன பாரதி இது வெறும் கஞ்சியை சமைத்து வைத்திருக்க என்று கேட்க அத்தை உங்களுக்கு தான் உடம்பு சரியில்லையே.. உடம்பு சரியில்லைன்னா கஞ்சி தான் குடிக்கணும் என்று பதிலடி கொடுக்கிறாள். யாரை கேட்டு இதை சமைத்த என்று கேட்க ஆதி தான் சொன்னாரு என்று சொல்லி போனை போட்டு குடுக்க அவன் ஆமாம் மா உங்களுக்கு உடம்பு சரியில்லல அதனால் தான் கஞ்சி செய்ய சொன்னேன். நீங்க கஞ்சி குடிக்கும் போது நாங்க மட்டும் எப்படி சாப்பிடுவோம். அதனால் தான் எல்லாருக்கும் கஞ்சி.. குடிங்க மா என்று போனை வைக்கிறான். 


தமிழ் பாப்பா அப்பாவும் கஞ்சி தான் குடுத்தாரு.. நானும் கஞ்சி தான் சாப்பிடுறேன் என்று டம்பளரை காட்டுகிறாள். இதையடுத்து ஸ்வேதா பாரதி போனில் இருக்கும் தனது கல்யாண வீடியோ ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்று யோசித்து பாரதி போனை எடுக்க ரூமுக்குள் வருகிறாள். தமிழ் பாரதி போனை வைத்து கேம் விளையாடி கொண்டிருக்க ஸ்வேதா உங்க அம்மா எங்க என்று கேட்டு போனை பிடிங்க தமிழ் குடுக்க மாட்டேன் என்று சொல்லி இழுக்க ஸ்வேதா வேகமாக போனை பிடிங்கியதும் தமிழ் படிக்கட்டில் இருந்து சரிந்து கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுகிறாள். 


இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர், சாரதா தமிழ் மூச்சு பேச்சு இல்லாததை பார்த்து பதற்றமாகி ஹாஸ்பிடலுக்கு தூக்குங்க என்று சொல்லி கூப்பிட்டு கிளம்ப ரத்னம் வந்து வீட்டு வாசலில் இறங்க அதை பார்த்து ஷாக்காகுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


 


மேலும் படிக்க | மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினர் மீது மோசடி வழக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ