பிருந்தாவனம் படத்திற்கு பிறகு அருள்நிதி நடித்துவரும் திரைப்படம் "இரவுக்கு ஆயிரம் கண்கள்". இப்படத்தை மு.மாறன் இயக்குகிறார், இவர் கே.வி.ஆனந்த் - அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் அருள்நிதி மற்றும் மகிமா நம்பியார் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். மேலும், ஆனந்தராஜ், அஜ்மல், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சுஜா வருநீ, சாயா சிங், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். 


க்ரைம் த்ரில்லர் பானியில் உருவாகி வரும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கின்றார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து வருகிறார்.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் படபிடிப்புகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகம் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.