ஐஸ்வர்யா ராய் தற்போது, இரண்டாவது முறையாக கர்பம் தரித்திருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்து பரவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய், கோவா கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானதையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில், ஐஸ்வர்யாராய் வயிறு கர்ப்பமடைந்திருப்பது போல் இருப்பதால் இந்த வதந்தியை பரப்பி வருகின்றனர்.


ஆனால் தற்போது வரை இதற்க்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு தற்போது ஆராத்யா, என்கிற பெண் குழந்தை உள்ளது.