சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் கல்பத்து அகோரமின் ஏஜிஎஸ் சினிமா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளனர். கல்பதி அகோரமின் குடியிருப்பு மற்றும் சென்னையில் உள்ள தியேட்டர் சொத்துக்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஜிஎஸ் தயாரித்த கடைசி படமான "பிகில்" படத்தில் நடித்த நடிகர் விஜய்யிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் அடுத்த படமான "மாஸ்டர்" படப்பிடிப்பு நடந்து வரும் நெய்வேலியில் இருந்த நடிகரை விஜய்யை நேரில் சென்று அதிகாரிகள் விசாரித்தனர். இதனால் "மாஸ்டர்" படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ள, நடிகர் விஜய்யை சென்னை அழைத்து வரப்படுகிறார் எனவும் கூறப்பட்டு உள்ளது.


அதேநேரத்தில் சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவரின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.