ஜாக்கிச்சானுக்கு திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி ஆஸ்கர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. தற்காப்பு கலையை சினிமாவில் பயன்படுத்தி அதன் மூலம் மக்களை கவர்ந்த ஜாக்கிசான் தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கினார். அவர் நடிகர், தற்காப்புக் கலை நிபுணர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்று பல துறையில் தனது முத்திரை பதித்தவர்.


முதல் முறையாக கௌரவ ஆஸ்கர் விருது ஜாக்கி சானுக்கு தான் அறிவிக்கப்பட்டுள்ளது.