சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் இளைஞர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 39 மணி நேரத்திற்கு மேலாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். 


இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை சந்திக்க வந்த ஆர்ஜே பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர்:-


மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். யாரையும் கஷ்டப்படுத்தவில்லை. இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறுகிறது. 


ஜல்லிக்கட்டு தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம் என்றால், அதற்காக இப்படி ஒன்று சேர்ந்து போராடுவது நம் ஒற்றுமையின் அடையாளம் என்றார்.  இனியும் தமிழன் ஏமாற மாட்டான் என்று தெரிவித்தார்.