50 கோடி வசூலை நெருங்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளிவந்து 10 நாட்களை கடந்துள்ள நிலையில் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பாசிட்டிவான விமர்சனங்களுடன் இந்தாண்டு தீபாவளி வின்னராகியுள்ளது. கடந்த வாரம் 10ம் தேதி வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஒரு வாரம் கடந்தும் நல்ல அருமையான வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜிகர்தண்டா2 படத்தின் கதை:
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், 1970களில் நடக்கும் கதைக்களத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருக்கும் பிரபல ரவுடி, அவனை வைத்து படம் இயக்கும் ஒரு இயக்குநர் என்ற முந்தைய ஜிகர்தண்டா படத்தின் கான்செப்ட் தான் இதிலும் உபயோகப்படுத்த பட்டிருக்கிறது. இதில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படங்களுக்கெல்லாம் நன்றாக நடித்திருக்கிறார் என்ற பாராட்டு அவருக்குத்தான் போய் சேரும். ஆனால், இந்த முறை நல்ல நடிகர் என்ற பாராட்டை ராகவா லாரன்ஸ் பறித்து சென்று விட்டார்.


மேலும் படிக்க | மன்சூர் அலிகான் விவகாரம்; டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு 


பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் கலக்கல்:
இந்நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்று வருகிறது, மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் செம்ம மாஸ் காட்டி வருகிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்.


50 கோடி வசூல்:
இந்நிலையில் தற்போது மக்கள் மத்தியில் வெற்றிபெற்றுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் 10 நாட்கள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மேலும் பல வசூல் சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



இதயனிடையே இந்த திரைப்படம் வெளியாகி முதல் நாளில் 5 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களிலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் மாஸ் காட்டியது. இரண்டாவது, மூன்றாவது நாட்களிலும் தலா 7 கோடி ரூபாய் வரை வசூலித்தது. பின்னரும் நாட்களிலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் கலெக்‌ஷன் குறையவில்லை என சொல்லப்படுகிறது. முதல் வாரம் முடிவில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 32 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம். அதேபோல் இந்தியா தவிர மற்ற நாடுகளில் 13 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் உலகம் முழுவதும் மொத்தமாக இதுவரை 45 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பிக்பாஸில் மீண்டும் வைல்ட்கார்ட்! உள்நுழையும் 3 பேர் இவர்கள்தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ