சர்வதேச பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் இந்தியாவில் தனது முதல் இசை நிகழ்ச்சியை நடத்த மும்பை வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில், ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியின் ஆரம்பநிலை டிக்கெட் 4,000 ரூபாய். 


இந்தியாவில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி நடத்தப்போகும் ஜஸ்டினுக்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜஸ்டின் பீபரின் இந்த இசை நிகழ்சிக்காக, 4 மில்லியன் டாலர் முதலீடுசெய்துள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன் ஜெயின் தெரிவித்துள்ளார்.


 



 


பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பிரபல பாதுகாவலர், ’ஷெரா’, தற்போது ஜஸ்டின் பைபரின் அதிகாரபூர்வ பாதுகாப்புப் பொறுப்பு பெற்றுள்ளார்.