தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நடிகர் சூர்யா. "தானா சேர்ந்த கூட்டம்" படத்திற்கு பிறகு முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு NGK என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்று தெரிவித்துள்ளார்.  


'அயன்', 'மாற்றான்' படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்கத்தை கவனிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இது குறித்து கே.வி.ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தக் படத்திற்கு தற்போது வரை பெயரிடப்படவில்லை என்பதால் இதற்க்கு சூர்யா 37 என்று வைக்கப்பட்டுள்ளது.