கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது சென்னையின் பரபரப்பான பகுதியில் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து வருகிறார். தினமும் 12-15 மணிநேரம் சூட்டிங் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் காலாவின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவிகிதம் முடிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் காலா படத்தின் குடும்ப புகைப்படம் தற்போது சமுக வளைதலத்தில் வைராலாகி பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் ரஜினியுடன் காலா குடும்பத்தித்னர் இருக்கும் காட்சி அமைந்து உள்ளது.