மே 28-ம் தேதி என்னால் மறக்க முடியாத நாள் என ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்று பதிவு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது.


மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து உள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். 


முதல் பார்வை டிரெய்லர் மற்றும் காலா படத்தின் பாடல்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து, நேற்று "காலா" படத்தின் புதிய டிரெய்லரை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டு இருந்தார்.



இந்நிலையில் அவரது பதிவுக்கு பதில் அளித்து ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்று இட்டுள்ளார் அதில்,


28.5.2011 நாளை நான் மறக்க மாட்டேன். அந்த நாளில் தான் அப்பாவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றோம். கடவுளின் அருளால் சில நாட்களில் குணமாகி திரும்பி வந்தோம். உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி... 7 ஆண்டுகள் கழித்து இது உங்களின் அன்புக்காக என அதில் குறிப்பிட்டுள்ளார்.