நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸில், மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் . கோமாளி இந்த படத்தை இயக்குனர்  பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இதில் ஜெயம் ரவிக்கு அவர் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி  சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.


அந்த வகையில் தற்போது சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் (madame tussauds) அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச்சிலை திறக்கப்பட உள்ளது. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.


ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையில் பல முன்னணி நட்சத்திரங்கள், பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச்சிலை வருகிற 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி திறப்பு விழா காண உள்ளது. இச்சிலையை நடிகை காஜல் அகர்வாலே திறந்து வைக்க உள்ளார்.


இதுகுறித்து சில புகைப்படங்களை காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 


 



 


 



 


 



 


 



 


மேலும், தென்னிந்திய நடிகைகளில் நடிகை காஜல் அகர்வாலுக்கு தான் முதல் முதலில் மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. இதற்கு காஜல் அகர்வாலின் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.