மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியா நிலையில், அவருக்கு கோவிட் தொற்று (Coronavirus) இருப்பது உறுதியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (Kamal Haasan) பக்கத்தில், "அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று (Coronavirus) உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்." எனப் பதிவிட்டுள்ளார்.


ALSO READ | கமல்ஹாசனுக்கு கோவிட் தொற்று உறுதி!  அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கமல் ட்வீட்


 



 


தற்போது பிக்பாஸ் 5 சீசன்(Bigg Boss Tamil 5) நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் கமல்ஹாசன் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்பு உரையாடுவார். அத்துடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்பதையும் அவர் தெரிவிப்பார்.


அதன்படி நேற்று 50வது எபிசோட்டில் பேசிய கமல்ஹாசன், நமது கைத்தறி நெசவாளர்களின் திறமையையும் வணிகத்தையும் பரப்புவதற்காக சிகாகோ சென்றிருந்ததாகவும், அவர்களின் கைத்திறமையை உலகச்சந்தையில் எடுத்துரைப்பதற்கான முயற்சி இது என்றும் கூறினார். மேலும் இசைவாணி நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்படார்.


முன்னதாக, அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன், இந்த எபிசோட்டில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்ததும் நேரடியாக விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் இந்த எபிசோட்டின் படப்பிடிப்பு ஒரு தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, கமல்ஹாசன் உடன் நிகழ்ச்சியின்போது  இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி கமல்ஹாசன் அருகில் இருந்தவர் இசைவாணி, ஷூட்டிங் பார்க்க வந்த பார்வையாளர்கள், எனவே இவர்கள் அவைரும் தற்போது கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டிருக்கலாம்.


இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய பங்கு கமல்ஹாசன். தற்போது கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், அவர் குறைந்தது இரண்டு வாரம் மேல் தனிமையில் இருக்க வேண்டும். இதனால், இரண்டு வாரத்திற்கான நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையில் "விக்ரம்" படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR