நடிகர் கமல்ஹாசன் கவிதை மூலம் தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டிவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் நடிகர் கமல் பேட்டி ஒன்றில் கூறினார். இதற்கு பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது.


இது தொடர்பாக நடிகர் கமல் டிவீட்டரில் கூறியது, நேற்று முளைத்த காளான்கள் போல் என் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் விரைவில் உண்மை என்ற வெயிலில் காய்ந்து போகும். இது போன்ற. குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றார்.