நடிகர் சிவாஜி கணேசன் நினைவாக, சென்னையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு சார்பில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.


சிவாஜியின் பிறந்த நாளான இன்று, இந்த மணிமண்டபம் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று இதனைத் திறந்து வைத்தார்.


மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த இவ்விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோரும் கலந்துகொண்டனர். 


இந்த விழாவில் பங்கேற்ற நடிகர்கள் ரஜினி, கமலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.


அப்போது விழாவில் பேசிய காமல்ஹாசன்-


இந்த நிகழ்ச்சிக்கு உள்ளே எனக்கு அனுமதி கிடைத்திருக்காவிட்டாலும், வெளியே அமர்ந்திருப்பேன். யார் தடுத்தாலும் இந்த விழாவிற்கு நிச்சயம் நான் வந்திருப்பேன்.


மேலும், சிவாஜி கணேசன் தேசிய, ஆசிய எல்லைகளை கடந்த கலைஞன் எனவும் புகழாராம் சூட்டினார். “சிவாஜி கணேசன் அரசியல் எல்லையை கடந்த நடிகர் மட்டுமல்ல. தேசிய, ஆசிய எல்லைகளை கடந்தவர். அந்த மாபெரும் கலைஞனுக்கு அரசு செய்யும் நன்றி அறிவிப்புதான் மணிமண்டபம். சிவாஜி கணேசனின் குடும்பத்தினரின் அனுமதியுடன், அக்குடும்பத்தில் தாமதமாக இணைந்த பிள்ளை.


இனி எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசன் என்ற கலைஞனை மதித்தே ஆக வேண்டும். அந்த மரியாதைக்காக கெஞ்சவோ, கொஞ்சவோ வேண்டாம். அவருக்கு இந்த மரியாதை தன்னால் கிடைக்கும்.


 அவரின் அடியொற்றி நடந்த கலைஞர்களில் நானும் ஒருவன். இங்த நிகழ்ச்சிக்கு நடிகனாக வரவில்லை. அவரது கோடானுகோடி ரசிகர்களில் ஒருவராக வந்துள்ளேன். அவரைப் போல் நடிக்க வேண்டும் என இன்றும் முயல்கிறோம். அதுதான் எங்களை மேம்படுத்துகிறது”


இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.