பீட்சா படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் கார்த்திக் சுப்பாராஜ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. மேலும் மதுரையை மையமாக வைத்து வந்த தமிழ் சினிமாக்களில் ஜிகர்தண்டா தனித்து தெரிந்தது. அதுமட்டுமின்றி படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தப் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்பாராஜின் கிராஃப் எகிறியது. அவரது மேக்கிங்கிற்கு எனவும் தனியாக அரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலரின் பாராட்டுக்களைப் பெற்ற ஜிகர்தண்டா படத்தின், இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்தச் சூழலில் ஜிகர்தண்டா படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு செய்த நாளான ஆகஸ்ட்1ஆம் தேதி ஜிகர்தண்டா 2ஆம் பாகம் உருவாகும் என தெரிவித்தார் கார்த்திக் சுப்பாராஜ்.



ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸும், எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி கவனத்தை ஈர்த்தது.



இந்நிலையில் ஜிகர்தண்டா 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. விரைவில் படத்தை முடித்து வெளியிடுவதில் கார்த்திக் சுப்பாராஜ் விறுவிறுப்படைந்துள்ளார்.


மேலும் படிக்க | Veera Simha Reddy Review : காற்றில் பறக்கும் எதிரிகள்.. வீர சிம்ஹா ரெட்டி படம் ரிவியூ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ